நீங்க தான் வேட்பாளர் உங்கள நான் எம்எல்ஏவாக பார்க்கணும்... 50 பேரை டிக் அடித்த விஜய்... அப்போ என்.டி.ஏ. கூட்டணி?!
சமீபத்தில் பனையூர் அலுவலகத்தில் நேர்காணல் நடத்திய விஜய் முதற்கட்டமாக 50 பேரை வேட்பாளராக ஓ.கே. செய்துள்ளாராம்.
தமிழக அரசியலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணையப் போகிறார் என்ற அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்கள் கடந்த சில நாட்களாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் அமித் ஷா நேரடியாக தலையிட்டு பல்வேறு அரசியல் கணக்குகளை முன்வைத்து விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனது அடிப்படை ஆதரவைக் கட்டியெழுப்ப முயற்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு, விஜயின் அரசியல் வருகை ஒரு பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள ஆதரவை கூட்டணிக்குள் கொண்டு வர முடிந்தால், அது தேர்தல் கணக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடு பாஜக வட்டாரங்களில் உள்ளது. இதன் காரணமாகவே விஜயை எந்த விதத்திலும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற தீவிர முயற்சியில் பாஜக தலைமை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய அரசியல் மட்டத்தில் இருந்து விஜய்க்கு பல்வேறு அரசியல் சிக்னல்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்தடுத்த தேர்தல்களில் முக்கிய பங்கு வழங்கப்படும், தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கும், மேலும் அவரது கட்சிக்கு தேவையான அரசியல் இடமும் ஆதரவும் வழங்கப்படும், அனைத்திற்கும் மேலாக போன்ற பல்வேறு “அரசியல் ஆஃபர்கள்” குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக துணை முதல்வர் பதவி வரை அமித் ஷா விஜய்க்கு ஆஃபர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அறிவு இருக்குறவங்கள அனுப்பனும்... அரசியல் சினிமா டயலாக் இல்ல.. விஜய் மீது ரஞ்சனா தாக்கு..!!
இது எதற்குமே விஜய் மசியாததால் தான் சிபிஐ சோதனை, ஜனநாயகன் வெளியீட்டில் முட்டுக்கட்டை, விவகாரத்து, நடிகையுடன் கள்ள உறவு என இஷ்டத்து விஜய் மீது அரசியல் அழுத்தங்களை பாஜக அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவே விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் சேர வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் மறுபக்கம், விஜய் தொடங்கியுள்ள அரசியல் பயணம் தனித்துவமான பாதையில் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. “புதிய அரசியல்” என்ற கோஷத்துடன் அரசியலுக்குள் வந்த விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு எடுத்தால் அது அவரது அரசியல் வாழ்விற்கே மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என எச்சரித்துள்ளார்களாம் நலம் விரும்பிகள்.
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா பின்னணியில் இருந்து அரசியலுக்குள் வந்த தலைவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் விஜயின் அடுத்த அரசியல் முடிவு தமிழக அரசியலின் எதிர்கால திசையை மாற்றக்கூடியதாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதை முழுமையாக நம்பும் விஜய், தவெகவை தனித்து களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்காக தான் கடந்த முறை சிபிஐ அனுப்பிய சம்மனைக்கூட சட்டை செய்யாமல் வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளார்.
சமீபத்தில் பனையூர் அலுவலகத்தில் நேர்காணல் நடத்திய விஜய் முதற்கட்டமாக 50 பேரை வேட்பாளராக ஓ.கே. செய்துள்ளாராம். “நீங்கள் தான் வேட்பாளர்கள். உங்களை எல்லாம் நான் சட்டமன்ற உறுப்பினராக தான் பார்க்க வேண்டும்” நேரடியாகவே உற்சாகப்படுத்தியுள்ளாராம். இந்த தகவல் மூலமாக விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இணையும் மனநிலையில் இல்லை. தனித்து போட்டியிட போகிறார் என்பது தெளிவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நேர்காணலின் போது "எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. இனி அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை.. நான் அரசியலுக்கு வந்தபிறகு எனக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்.. எதற்கும் துணிந்து வேலைகளை பாருங்கள்.." என தவெகவினரிடம் விஜய் உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!