அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!
அதிமுக, தவெக சேர்ந்து, திமுகவை விமர்சிக்க துவங்கியதால், அரசியல் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திமுக தடுமாறியது.
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக இடையே கடுமையான விமர்சனப் போர் நடந்து வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது தவெக தலைவர் நடிகர் விஜய் தான். தவெக தொடங்கிய நாள் முதல் அதிமுகவை விமர்சிக்காமல் இருந்த விஜய், தற்போது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.
கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், அதிமுகவை 'ஊழல் சக்தி' என்றும், திமுகவை 'தீய சக்தி' என்றும் விமர்சித்தார். "தீய சக்தியும் ஊழல் சக்தியும் தமிழகத்தை ஆளக் கூடாது" என்று தெளிவாகக் கூறினார். இதற்கு அதிமுக உடனடியாக பதிலடி கொடுத்தது. "பனையூர் பண்ணையாரே, வெளியே வந்து அரசியல் செய்யுங்கள்" என்று தொடங்கி, விஜய் மீது கடும் தாக்குதல் நடத்தியது.
அதிமுக அறிக்கையில், "பட வெளியீட்டுக்காக அன்றைய முதல்வர் வீட்டில் காத்திருந்தவர் பனையூர் பண்ணையார். சட்டவிரோதமாக பிளாக் டிக்கெட் விற்று கோடிகள் ஊழல் செய்தவர்" என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. "அறிவாலய குப்பையோடு கூட்டி எறிந்து விடுவோம்" என்று அதிரடியாக பேசியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்தது.
இதையும் படிங்க: வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!
இந்த மோதலை திமுக மறைமுகமாக முடுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. திமுக ஆதரவு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இந்த சர்ச்சையை தொடர்ந்து வீசி வருகின்றன. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இரு தரப்பு நிர்வாகிகளிடமும் இதே கேள்விகளைத் தூண்டி விடுகின்றன. உணர்ச்சிவசப்பட்டு இருதரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்க, திமுக ஒதுங்கி நின்று ரசித்துக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தவெக தொடங்கியபோது அதிமுகவை விமர்சிக்காமல், இருவரும் திமுகவை மட்டும் குறிவைத்து விமர்சித்தனர். இதனால் திமுக தடுமாறியது. ஆனால் தற்போது விஜயின் 'ஊழல் சக்தி' குற்றச்சாட்டு அதிமுகவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த மோதல் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில், எதிர்க்கட்சிகளிடையே பிளவு ஏற்படுவது ஆளும் கட்சிக்கு லாபகரமாக உள்ளது.
தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தவெக-அதிமுக இடையேயான இந்த வார்த்தைப் போர் தொடர்ந்தால், வாக்கு பிரிவு ஏற்படலாம். திமுக இதை பயன்படுத்தி தனது நிலையை வலுப்படுத்த முயல்கிறது. இரு தரப்பு தலைவர்களும் உணர்ச்சிவசப்படாமல், மக்கள் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பிரசாரம் செய்ய வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சர்ச்சை தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்! ஷாக் தந்த திமுக! கடைசி நேரத்தில் மாறிய திட்டம்! விஜய் பயணத்தில் திடீர் திருப்பம்!!