×
 

ஒரே நாளில் கைது முதல் விடுதலை வரை... உதயநிதி வழக்கின் முழு பின்னணி என்ன?

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது வரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சுமார் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இன்று காலை சென்னை இல்லத்திலிருந்து உதயநிதி ஸ்டாலினை தஞ்சை காவல்துறையினர் அழைத்து வந்தனர். முதலில் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தஞ்சாவூரில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

செங்கிப்பட்டி காவல் நிலையத்தின் முதல் மாடியில், இந்த வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவருக்கு டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட இருவர் காவல் நிலைய ஜாமீன் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையும் படிங்க: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்... வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சி.எம். விஜய்?

இந்தச் சம்பவத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., ஏழு எஸ்.பி.க்கள், 50-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.க்கள், 100-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

உதயநிதி ஸ்டாலினிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் அவர்களை அமைதிப்படுத்தினர்.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

காலை தொடங்கிய இந்த பரபரப்பான சம்பவங்கள், தஞ்சாவூர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற விசாரணையுடன் நிறைவடைந்தன. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இறுதியாக, விசாரணைக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது இன்றைய முக்கிய பரபரப்பு நிகழ்வாக அமைந்தது.

இதையும் படிங்க: சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share