×
 

திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்து வருகிறது. இதனிடையே பாஜக தலைவர்கள், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.  அதற்கேற்ப அதிமுக தலைவர் வைகை செல்வனை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்திருந்தார். ஆனாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இணையாது என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அதேபோல் திமுக அணியில் ஏன் விசிக தொடர்கிறது என்பதையும் திருமாவளவன் விளக்கி இருக்கிறார். அதிமுக பக்கம் ஏன் போகக் கூடாது என்று பலரும் கேள்வி கேட்டதால், தான் பாஜக இருக்கிறது என்பதை கூறினார். விசிகவுக்கு கூட்டணி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே கொள்கை கூட்டணியாக திமுகவுடன் இருக்கிறது.

இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கிய பங்கு விசிகவுக்கும் உள்ளது. சீட் பேரத்திற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் அது விசிகவுக்கு தேவையில்லை. எங்களுக்கு வேறு கட்சியை நாடி செல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது வருத்தம் தான். இம்முறை கூடுதல் தொகுதிகளை பெறுவது அனைவரின் விருப்பம். எங்களுக்கு 50 தொகுதிகளில் கூட போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ஆனால் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்பின்னரே எங்களுக்கு தெரிய வரும். அதனால் கூட்டணி, எண்ணிக்கை தொடர்பாக திருமாவளவன் பேச்சுவார்த்தை செய்து கொள்வார். நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 15 தொகுதிகள் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதே எங்களை குறைத்து மதிப்பிடுவதாக பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share