×
 

துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...! 

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என வதந்திகளை கிளப்பிவிட்டனர். கூட்டணியே பாதிக்கப்படும் அளவிற்கு கருத்து பரப்பப்படும் சூழலில் அதனை கவனிக்க வேண்டியிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்திருந்தது. இதனிடையே தான் சட்டமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகவும், எனக்கு பதிலாக காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நாங்கள் அங்கம் வகிக்கிற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் சங் பரிவார்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகளை குறிவைத்தும்,  என்னை குறிவைத்தும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். என்னை நயவஞ்சகமாக என்னை அந்த கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சி செய்தார்கள். இன்றைக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக களம் காண்கிறது என்று சொன்னால், அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பாக திருமாவளவன் மிக முக்கிய காரணம் என்பதை நான் பெருமிதத்தோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

இதையும் படிங்க: குட்டி ப்ளைட்டும்! ஸ்டார் ஹோட்டல் ரூமும் கொடுத்திருங்க!! பிரசாரத்திற்கு வர டிமாண்ட் செய்யும் கமல்! திமுக அப்செட்!

எந்த ஆசை வார்த்தைக்கும் இணங்காமல், எந்த தூண்டலுக்கும் இலக்காகாமல் நான் உறுதியாக நின்று திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பாதுகாப்பதில் பெரும்பங்கு பங்களிப்பு செய்திருக்கிறேன். பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். இதை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டியது என்னுடைய  கடமை. அதிலும் குறிப்பாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து முழங்கி வந்த நிலையில், இந்த தேர்தலில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை கோறுவீர்களா என்று கேட்டபோது நான் திட்டவட்டமாக மறுதலித்தேன். ஏன் திட்டவட்டமாக மறுதளித்தேன் என்று சொன்னால் அப்படி ஒரு முழக்கத்தை வைப்பதன் மூலம் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதன் மூலம் இதிலே ஒரு பலவீனம் உருவாகி விடக்கூடாது என்கிற அந்த பொறுப்புணர்வுதான். 

 நான் போட்டியிட போகிறேன் என்று சொன்னதும் ஏதேதோ யுகங்களை ஆளாளுக்கு கட்டமைத்திருக்கிறார்கள். திருமாவளவன் பதவிக்கு ஆசைப்பட்டு எம்பி பதவியை விட்டுவிட்டு எம்எல்ஏவுக்கு நிற்க போகிறார் என்றும், அப்படி இங்கே வந்து அவர் கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்க போகிறார் எனக்கூறுகிறார்கள். துணை முதலமைச்சர் ஆவதற்கு ஆசைப்படுகிறார் என்றும் தொங்கு சட்டசபை தான் உருவாகப்போகிறது என்று திருமாவளவனே யூகிக்கிறார் என்றும் அதனால் அவர் சட்டமன்றத்திலே இருந்தால்தான் கூட்டணி ஆட்சிக்கான கருத்தை உயர்த்தி பிடிக்க முடியும் என்று அவர் கருதுகிறார் என்றும் ஆளாளுக்கு அவரவர் யுகங்களை எல்லாம் செய்திகளாக்குகிறார்கள். 

அதேபோல நான் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது அவர்கள் திமுக ஆதரவு நிலை எடுத்ததனால்தான் என்று மிக தவறான அவதூறுகளை பரப்புகிறார்கள். நான் இந்த கூட்டணியில் உறுதியோடு நிற்கிறேன். நான் இந்த கூட்டணிக்கான அரசியலை பேசுகிறேன். அதைத்தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் எதிரொலித்தார்கள். எனவே, நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார்." எனத் தெரிவித்திருக்கிறார்

இதையும் படிங்க: பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? - திமுகவை ஸ்டன் ஆக்கிய திருமா... கண்டுகொள்வாரா ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share