×
 

“யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...” - சி.எம்.விஜய்க்கு செக் வைத்த விசிக தலைவர் திருமா...!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி, கர்நாடகாவில் அந்த அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை

சபரிவர்மனுடைய சாவுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கருத்து

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் தந்தை  தொல்காப்பியன் நினைவு தினத்தையடுத்து  அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து  வீர வணக்கம் செலுத்திய பிறகு  திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் .

காவேரி நதிநீர் விவகாரம்  நம்முடைய அனைவரின் நிலைப்பாடு மற்றும் உணர்வுதான், தமிழக அரசின் நிலைப்பாடாகவும் உணர்வாகவும் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தமிழ்நாட்டு நலன்களைப் பாதுகாப்பதில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு  உறுதுயாக உள்ளது.

இதையும் படிங்க: துரோகம் பண்ண என்ன இருக்கு?! திமுக இத பண்ணலையே! திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!!

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி, கர்நாடகாவில் அந்த அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. இந்திய ஒன்றிய அரசும் அவ்வாறு ஒரு சார்பு நிலை எடுக்காது என்று நான் பெரிதும் நம்புகிறேன் என்று தொல் திருமாவளவன் கூறினார். தமிழக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்படி ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டால், அதனை நாங்கள் வரவேற்போம் என்றார்.

நாகர்கோவிலில் சபரிவர்மன் சிறை மரண விவகாரம் குறித்து பதில் அளித்த தொல். திருமாவளவன்,  நாகர்கோவிலில் நடந்திருக்கிற உயிரிழப்பு பெரும் துயரமளிக்கிறது. பிரேதப் பரிசோதனை (Post-mortem) மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கை, அவர் உடம்பில் பல காயங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகிறது.  இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

காவல் நிலையங்களில், சிறைக் கஸ்டடிகளில் விசாரணை கைதிகளாக அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களாக அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கும், சிறைப்படுத்தப்படுபவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கும், சிறைத்துறைக்கும், காவல்துறைக்கும் உள்ளது. ஆனால், அவ்வப்போது இதுபோல அத்துமீறல்களும், படுகொலைகளும் அரங்கேறுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சபரிவர்மனுடைய சாவுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார். தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுவதுகுறித்த கேள்விக்கு,  கடந்த முறை அவர்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நின்று கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, அப்போது அது நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது.

இந்த முறையும் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவை அவர்கள் அறிமுகப்படுத்துவார்களேயானால், அதனை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் உள்ளது. தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட, இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை ஏற்க மாட்டார்கள்; கடுமையாக எதிர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த முறையும் அது முறியடிக்கப்படும் என்றும் நம்புகிறேன் என்று தொல். திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க: ஒன்னு வடதுருவம்! இன்னொன்னு தென்துருவம்! எப்படி ஒண்ணா இருக்க முடியும்?! திருமாவுக்கு வைகோ பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share