என்னது அனுபவம் இல்லையா? MGR, ஜெயலலிதாவையே மறந்துட்டீங்க..! அதிமுகவை டைரக்ட் அட்டாக் செய்த விஜய்…!
சேலத்தில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரம் செய்ய முடியும் என்று அழுகிறார்கள் என்றும் அதற்கு பதிலடி கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அதிகாரத்தை வைத்து கொள்ளையடித்ததை தவிர வேறு அனுபவம் ஏதேனும் இருக்கிறதா என்று கேள்வி கேட்டார். என்னைப்போல் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓட்டு வாங்க தில்லு இருக்கா என்ற கேள்வி எழுப்பினார். கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் மீறி இன்று களத்தில் தனியாக நின்று இரண்டு வருடங்களில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தையும் தாண்டி மக்கள் ஆதரவை பெற்றிருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா என்று கேட்டார்.
அண்ணாவை மறந்தது, எம்ஜிஆரை மறந்தது, ஜெயலலிதாவை மறந்தது., இவர்கள் சொன்ன அனைத்தையும் மறந்து, எதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்னார்களோ அதையெல்லாம் மறந்தவர்கள் தங்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறலாமா என்றும் கொள்ளை அடிப்பதில் தங்களை அனுபவம் இல்லை எனவும் தெரிவித்தார். சுட்டு போட்டாலும் அது எங்களுக்கு வராது என கூறினார்.
இதையும் படிங்க: விசில் ஊதுங்க... அந்த சத்தம் தான்..! ஊழல் ஆட்சி குப்பைக்கு போகும்..! விஜய் உறுதி..!
மறைமுகமாக சரண்டர் ஆவது போன்றவை சுட்டு போட்டாலும் தங்களுக்கு வராது என்று தெரிவித்தார். மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தால் போதும்யா சூப்பரான நல்லாட்சி கொடுக்கலாம் என்று தெரிவித்தார். நல்லாட்சி கொடுப்பதற்கு பட்டம் படித்த மேதாவியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் மக்கள் சக்தியின் துணையாக மக்கள் மீது அக்கறையுடன் இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். தான் அதை செய்து காண்பிக்கிறேன் என்ற தெரிவித்தார்.
இதையும் படிங்க: திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!