×
 

தவெக வேட்பாளர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் விஜய்?! ஒரு கண்ணில் வெண்ணெய்! இன்னொன்றில் சுண்ணாம்பா?!

முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் விஜய், தனது கட்சியின் முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்கிறார். மற்ற வேட்பாளர்களை எல்லாம் ‛‛அம்போ'' என விட்டுவிட்டார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆனால் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்து வருவதாக கட்சியினரிடையே புகார் எழுந்துள்ளது.

முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே வேட்பாளராக உள்ளதால் அங்கு அதிக நாட்கள் செலவிட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் உள்ள சாதாரண வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. 

இதுவரை விஜய் சென்னை, காரைக்குடி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரோடு ஷோ மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் தொகுதிகளாகவே உள்ளன.

இதையும் படிங்க: இன்று பெரம்பூர்! நாளை கடலூர்! 3வது முறையாக ரத்தாகும் விஜய் பிரசாரம்! தவெக நிர்வாகிகள் தவிப்பு!

ஏற்கனவே விஜய் திடீரென பிரசாரத்தை ரத்து செய்வது தொடர்பாக கட்சியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. போலீஸ் அனுமதி கிடைத்தாலும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு வீடு திரும்புவதாக புகார்கள் வருகின்றன. மேலும், மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய மறுப்பது, வெளி மாவட்டங்களில் பிரசாரம் முடிந்ததும் உடனடியாக தனி விமானத்தில் பனையூர் திரும்புவது போன்றவையும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

விஜய் இதுவரை பிரசாரம் செய்த முக்கிய தொகுதிகள் பின்வருமாறு: பெரம்பூர் (தானே வேட்பாளர்), கொளத்தூர் (கட்சி அட்மின் வி.எஸ். பாபு), வில்லிவாக்கம் (தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா), காரைக்குடி (மாவட்ட செயலாளர் டி.கே. பிரபு), கன்னியாகுமரி (மாவட்ட செயலாளர் மாதவன்), தூத்துக்குடி (விஜயின் நண்பரும் கட்சி அட்மினுமான ஸ்ரீநாத்), 

திருப்பூர் தெற்கு (மாவட்ட செயலாளர் பாலமுருகன்), எழும்பூர் (துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன்), ஆயிரம் விளக்கு (கட்சி அட்மின் ஜே.சி.டி. பிரபாகர்), தி.நகர் (பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்) உள்ளிட்டவை.

இந்த தொகுதிகள் அனைத்தும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களுக்குரியவை. ஆனால் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் சாதாரண பின்னணி வேட்பாளர்கள் “நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தொகுதிக்கு விஜய் எப்போது வருவார்?” என்று கட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து காத்திருக்கின்றனர்.

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், விஜய்யின் இந்த பிரசார உத்தி த.வெ.க.வுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முழு தமிழகத்தையும் உள்ளடக்கிய பிரசாரம் தேவை என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த சில நாட்களே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share