×
 

விஜயை முடக்க உதயநிதி போட்ட ஸ்கெட்ச்!! ப்ளான் B-யை செலக்ட் செய்த தவெக!! மாறும் களம்!

சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம், முதல்கட்டமாக 60 வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பங்கேற்ற வேட்பாளர்களில் சிலர், தகுதி படைத்தவர்கள் இல்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் நிலவுகிறது.

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட வேட்பாளர் ஆலோசனையில், கட்சியின் சில முடிவுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 

பனையூரில் உள்ள அலுவலகத்தில் 60 வேட்பாளர்களுடன் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தினார். இதில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு எதிராக கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதிக்கு சபரிநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விஜயின் டிரைவரும் தற்போது பிரதான உதவியாளருமான ராஜேந்திரனின் மகன். 

இதையும் படிங்க: ரஜினியை மிரட்டிய "திமுக குடும்பம்"... ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சபரிநாதன், அரசியல் அனுபவம் குறைவானவர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. விருகம்பாக்கம் விஜய் பிறந்து வளர்ந்த பகுதி என்பதால், 90 சதவீத நிர்வாகிகள் விஜயே அங்கு போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் சபரிநாதனை தேர்வு செய்தது கட்சி வட்டச் செயலர்களை ஏற்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பெரம்பூரில் கிறிஸ்தவ சமுதாய வாக்குகள் 14 சதவீதம் உள்ளன. அவர்களில் 44,000 பேர் த.வெ.க. உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கட்சி தரப்பு கூறுகிறது. இந்த ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்தால் வெற்றி எளிது என்ற நம்பிக்கையில் விஜய் அங்கு களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

திருச்சி கிழக்கில் வெள்ளாளர் சமுதாய வாக்குகள் 50,000க்கும் மேல் உள்ளன. தலித் கிறிஸ்தவ வாக்குகளும் கணிசமாக இருப்பதால், அங்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பதால், ஒரு தொகுதியில் தோல்வியடைந்தால் கட்சி பிம்பம் பாதிக்கப்படும் என்பதால் இரு தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால், தி.மு.க. சார்பில் இளைஞரணி நிர்வாகி ஜோயல் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கிறிஸ்தவ நாடார் சமுதாய வாக்குகளை பிரிக்கும் வியூகமாக இது பார்க்கப்படுகிறது. இரு தொகுதிகளிலும் கிறிஸ்தவ வாக்குகளை முழுமையாக நம்பி விஜய் களமிறங்கியுள்ளது கட்சியின் தேர்தல் உத்தியாக தெரிகிறது. த.வெ.க.வின் முதல் சட்டமன்ற தேர்தல் பயணத்தில் இந்த முடிவுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share