×
 

இனி விசிலு வேண்டாம்! ஸ்பீக்கருக்கு மாறுங்க!! தவெக சின்னத்தை கண்டு அரசுக்கு அலர்ஜி! தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவு!

த.வெ.க.,வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்கள் 'விசில்' பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை தடை விதித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.) இந்திய தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி விசில் சின்னத்தில் களமிறங்க உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெரு வீதிகளில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள், வீடுகளுக்கு வந்திருப்பதை அறிவிக்க 'விசில்' ஊதுவது வழக்கம். விசில் சத்தம் கேட்டதும் மக்கள் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் போடுவது பழக்கமாக உள்ளது. ஆனால், இனி இந்த விசில் பயன்படுத்த முடியாது. நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் இனி விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். அரசு பேருந்துகளில் நடத்துநர்களும் விசில் ஊத முடியாது. இதனால், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியை அதிர வைத்த விசில் சப்தம்!! விஜயின் ப்ளான் B! அமித்ஷாவையே அலறவிட்ட தளபதியின் சீக்ரெட்மூவ்!!

நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விசிலுக்கு மாற்றாக ஒலிபெருக்கி பயன்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. தூய்மை விழிப்புணர்வு பாடல்களை குப்பை வண்டியில் ஒலிபரப்பி, மக்கும் - மக்காத குப்பை பிரித்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். விசிலை விட ஒலிபெருக்கி மூலம் தெளிவான தகவல் கொடுக்க முடியும். எனவேதான் இந்த முடிவு" என தெரிவித்தனர்.

சில உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே ஒலிபெருக்கி முறையை பின்பற்றி வருகின்றன. ஆனால் பல இடங்களில் இன்னும் விசில் பயன்பாடு தொடர்ந்து வந்தது. தற்போது தேர்தல் சின்னம் காரணமாக முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தூய்மைப் பணியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "விசில் இல்லாமல் மக்கள் குப்பையை எடுத்து வருவார்களா?" என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த முடிவு த.வெ.க.வின் சின்னத்தை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இது எப்படி பாதிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஒலிபெருக்கி முறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாட்கள் தான் சொல்லும். 

இதையும் படிங்க: சின்னத்தை காட்டக்கூட பயமா? விசிலடிக்கக்கூட பயப்படும் ஜனநாயகன்! இன்னும் ஏன் மௌனம்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share