×
 

உ.பி., முதல்வர் யோகி அரசில் வெடிக்கும் அதிருப்தி? அமைச்சர்கள் vs ஐஏஎஸ் அதிகாரிகள் மோதலால் சர்ச்சை!

உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், மருத்துவத் துறையையும் கவனித்து வருகிறார். அவரது ஒப்புதல் அல்லது தகவல் இல்லாமல் சில மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

யோகி ஆதித்யநாத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை தக்க வைப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறம் வேகமெடுத்து வரும் நிலையில், ஆட்சிக்குள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக சில அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது துறைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அமைச்சர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் நேரடியாக முதல்வரின் உத்தரவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமைச்சர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தர்காவில் கறி சமைக்கக்கூடாது... கையில் தேசியக்கொடியுடன் பாஜகவினர் அட்ராசிட்டி... பெரியகுளத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!!

உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், மருத்துவத் துறையையும் கவனித்து வருகிறார். அவரது ஒப்புதல் அல்லது தகவல் இல்லாமல் சில மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பிரிஜேஷ் பதக், சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிக்கு கண்டனக் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்துக்கு அதிகாரி உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், மேலும் சில அமைச்சர்களும் தங்களது துறைகளில் செயல்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், தனது துறையில் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், அவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடையிலான இந்த மோதல் தற்போது உத்தரப் பிரதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர்கள் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படும் இந்த அதிருப்தியை முதல்வர் யோகி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share