×
 

ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா! பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபைனலில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதல்.

ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற U19 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கை மிக எளிதாகக் கடந்து இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது இது 10-ஆவது முறையாகும். மேலும், இது இந்தியாவின் தொடர்ச்சியான 6-ஆவது இறுதிப்போட்டி வாய்ப்பாகும்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது,  அந்த அணியின் பைசல் ஷினோசாடா (110 ரன்கள்) மற்றும் உஸைருல்லா நியாசாய் (101* ரன்கள்) ஆகியோரின் அபார சதங்களால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

இந்தியத் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, ஆரம்பம் முதலே அதிரடியைக் காட்டியது. தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் பொறுப்புடன் விளையாடி 104 பந்துகளில் 115 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்தார். 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 33 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன்களும் எடுத்து வெற்றிப் பாதையை எளிதாக்கினர்.

இந்தியா 41.1 ஓவர்களிலேயே 311 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இது அண்டர்-19 உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் ஒரு அணி எட்டிய மிக உயர்ந்த ரன் சேஸ் ஆகும்.

இதையும் படிங்க: விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share