×
 

பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை... ஆபாச படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரன் கைது..!

ஆசைவார்த்தை கூறி ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக நிற்க வைத்து அதை தனது செல் போனில் படம் பிடித்து வைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் பிளஸ் 2  மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அது சம்பந்தமான ஆபாச படங்களை இன்ஸ்டா கிராமில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய டிக்சன்.மீன்பிடி தொழிலாளி. இவர், அதே பகுதியில் ஒரு வீட்டில் நடன பயிற்சிக்கு வந்து சென்ற பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வந்தனர்.

ஆரோக்கிய டிக்சன் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக நிற்க வைத்து அதை தனது செல் போனில் படம் பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் ஆரோக்கிய டிக்சன் மாணவியிடம் பேசும் போது பதிவு செய்து வைத்திருந்த அவரது அந்தரங்க காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மாணவியை தனது வீட்டிற்கு  வரவழைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இதன் பின்னர் ஆரோக்கிய டிக்சன் வேறு ஒரு பெண்ணுடன் பேசிபழகி வந்தது மாணவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!

ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய டிக்சன் மாணவியுடன் வீடியோ காலில் பேசிய போது அவர் நிர்வாணமாக இருக்கும் ஆபாச புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.இது குறித்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை மாணவி  தெரிவித்தார். பின்னர் மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் ஆரோக்கிய டிக்சனை போலீசார் கைது செய்தனர்


 

இதையும் படிங்க: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திக் கிழித்த பெண்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share