5 மாநிலங்களில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை... தமிழ்நாடு டூ அசாம்.. காத்திருக்கும் அதிரடி மாற்றம்...!
தற்போதைய நிலவரப்படி கேரளத்தில் காங்கிரஸும், தமிழகத்தில் தவெகவும், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் மொத்தம் 824 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகவும்,புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 அன்றும், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்று.
இன்று அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையானது பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி கேரளத்தில் காங்கிரஸும், தமிழகத்தில் தவெகவும், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது 5 மணி நிலவரப்படி 5 மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதோ...
புதுச்சேரி சட்டப் பேரவை:
மொத்த இடங்கள்:30
என்.ஆர்.காங்.- 19
தவெக-1
காங்கிரஸ்-6
மற்றவை-4
பெரும்பான்மை - 16
மேற்கு வங்கம் சட்டப்பேரவை:
மொத்த தொகுதிகள்:293
திரிணாமுல்-89
பாஜக-198
காங்-2
இடதுசாரி-1
மற்றவை-3
பெரும்பான்மை - 147
அசாம் சட்டப்பேரவை:
மொத்த இடங்கள்: 126
பாஜக-101
காங்கிரஸ்-21
மற்றவை-4
பெரும்பான்மை - 64
கேரளா சட்டப்பேரவை:
மொத்த தொகுதிகள்: 140
கம்யூ-35
காங்கிரஸ் -100
பாஜக -3
மற்றவை-2
பெரும்பான்மை -71
தமிழ்நாடு:
மொத்த தொகுதிகள்: 234
பெரும்பான்மை: 118
தவெக-105
அதிமுக-54
திமுக-76
இதையும் படிங்க: தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!