×
 

பெங்களூரு டு சென்னை பறந்து வந்த ஸ்பெஷல் டெலிவரி... 507 கிலோ ஆபத்தை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு போலீஸ்...!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் பாரதி(30), தினேஷ் குமார்(22) ஆகிய இருவரையும் காருடன் கைது செய்தனர் .இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

பெங்களூரில் இருந்து காரில்  கடத்திவரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 507 கிலோ எடையுள்ள குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேர் கைது எஸ்.பி தனிப்படை போலிசார் நடவடிக்கை.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட மெல்லும் வகையிலான புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, 2026-ம் ஆண்டிலும் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள், வணிக வளாகங்கள், கிடங்குகள் மற்றும் கடத்தல் வழித்தடங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு முக்கிய நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படைகளை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 65 காவல் ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 325 காவலர்கள் என மொத்தம் 520 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் படையும், சென்னை உள்ளிட்ட நகர காவல் ஆணையரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் சிறப்புப் படைகளும் செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை வாகனச் சோதனை, திடீர் சோதனை, கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பெங்களூரில் இருந்து கார் மூலம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா நடத்திவரப்பட்டு  வட மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றன. விழுப்புரம் தனிப்படை போலீசார் கிடைத்த ரகசிய தகவலின் படி இரவு ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 507 கிலோ குட்கா பொருள்கள் மூட்டைமூட்டையாக பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் பாரதி(30), தினேஷ் குமார்(22) ஆகிய இருவரையும் காருடன் கைது செய்தனர் .இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

இதையும் படிங்க: சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share