×
 

வேற வழி தெரியல ஆத்தா..! வேம்பு - அரச மரத்துக்கு வினோத கல்யாணம்…! ஆயிரக்கணக்கான 90ஸ் கிட்ஸ்கள் பங்கேற்பு..!!

வேம்பு - அரச மரத்திற்கு திருமணம் நடத்தி வைத்த வினோத வழிபாட்டை திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

காரியாபட்டி அருகே திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேம்பு-அரச மரத்திற்கு திருமணம் நடத்தி வைத்த வினோத வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 90களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாகிறது அல்லது சிலருக்கு இன்னும் நடக்கவே இல்லை என்ற புலம்பல் இன்று தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பொதுவான ஒன்றாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள், ரீல்கள், பொது கருத்துக் கணிப்புகள் எல்லாம் இதைத் தொடர்ந்து கலாய்த்தும், ஏக்கத்துடனும் பகிரப்படுகின்றன. "2k கிட்ஸ் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டாங்க, நமக்கு மட்டும் ஏன் இப்படி?" என்ற கேள்வி அடிக்கடி ஒலிக்கிறது. எப்ப கல்யாணம்? எப்ப கல்யாணம்? என்ற கேள்விதான் எல்லா 90ஸ் கிட்ஸ்களும் சந்திக்கும் மிகப்பெரிய வார்த்தையாக இருக்கிறது.

எப்படியாவது திருமணம் நடக்காதா என்று பலர் ஏங்கி காத்திருக்கும் சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலையில் திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் கல்யாணம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், வேம்பு மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு புற்று நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற வினோத ஆன்மிக நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கோவிலில் தான் வேம்பு மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

கோவில் வளாகத்தின் பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்துள்ள வேம்பு மற்றும் அரச மரங்கள் இப்பகுதி மக்களால் தெய்வீக மரமாக கருதப்படுகின்றன. அரச மரம் சிவபெருமானாகவும், வேம்பு மரம் பார்வதியாகவும் பாவித்து வழிபட்டு வந்தனர். இதனால், இந்த இரு மரங்களுக்கும் திருமணம் நடத்தினால் திருமண தடை நீங்கி விரைவில் நல்ல துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி..! அண்ணாமலையார் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்..!

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் வரன் கிடைக்க வேண்டி இந்த வழிபாடு நடத்தப்பட்டது. உண்மையான திருமண விழாவை ஒத்திருக்கும் வகையில் சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சீர் வரிசைகள் சுமந்து வந்த பக்தர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது. கலந்து கொண்ட பக்தர்கள் மொய் பணம் செலுத்தி தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் திருமண வயதை கடந்தும் வரன் அமையாமல் உள்ள இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். பாரம்பரியம், நம்பிக்கைகள் இதையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 90ஸ் கிட்ஸ் களின் திருமண பிரச்சனை என்பது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் துணிகரம்... 137 சவரன் நகையை ஆட்டையை போட்ட பலே கில்லாடிகள் !! துருவி துருவி விசாரணை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share