தொடரும் ரெட் அலர்ட்... அச்சுறுத்தும் கனமழை... எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!!
தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும்.
இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தமிழகத்தை சுத்துப்போடும் மழை!!
இதன் தொடர்ச்சியாக நாளையும் நாளை மறுநாளும் தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும். தென்காசி, தேனி நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 31ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.. கோவை, நீலகிரிக்கு விரைந்தது பேரிடர் மீட்புப் படை!!