×
 

ரூ.7 வரை உயர்கிறதா ஆவின் கொள்முதல் விலை? முதல்வர் விஜய்யின் அறிவிப்பை எதிர்நோக்கும் பால் உற்பத்தியாளர்கள்!!

இதனால் நிறுவனத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசு பால் நிறுவனமான ஆவின், சமீப காலமாக கடுமையான சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிதியாண்டின் மே முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் தினசரி பால் கொள்முதல் அளவு கடந்த ஆண்டை விட சுமார் 4.35 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் அதே மாதங்களில் நாளொன்றுக்கு 34.3 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 30.2 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் அமுல் மற்றும் கர்நாடகாவின் நந்தினி போன்ற மாநில பால் கூட்டுறவு நிறுவனங்கள் லாபகரமாக இயங்கி வரும் நிலையில், ஆவின் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது கவலை அளிக்கிறது. முக்கிய காரணம், கொள்முதல் விலை தனியார் நிறுவனங்களை விட குறைவாக இருப்பதே. தனியார் நிறுவனங்கள் பசு பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 முதல் 45 வரையிலும், எருமை பாலுக்கு ரூ.50 முதல் 55 வரையிலும் வழங்கும்போது, ஆவின் தற்போது ஊக்கத்தொகை உட்பட பசு பாலுக்கு ரூ.38, எருமை பாலுக்கு ரூ.47 மட்டுமே வழங்குகிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலை வழங்க விரும்புகின்றனர்.

இந்த நிலையை சரிசெய்ய, தமிழக அரசு பசு பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி ரூ.43 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.7 உயர்த்தி ரூ.54 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இதை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக 2022 நவம்பரில் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வு மூலம் தினசரி கொள்முதலை 30 லட்சத்திலிருந்து 39 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆவின் பால்களில் ரசாயன நெடி..! பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை மண்டலம்..!

மாநிலத்தில் உள்ள சுமார் 9,500 கிராம பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 100 லிட்டர் அதிகமாக கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. இதனால் சுமார் 3.6 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர். மேலும், கொள்முதல் விலை உயர்வு பால் கலப்படப் பிரச்சினையையும் குறைக்க உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர். சில மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் குறைந்தபட்ச தரநிலைகள் (4% கொழுப்பு, 8% SNF) கூட எட்டப்படவில்லை. 

தனியார் நிறுவனங்கள் லாக்டோமீட்டர் மூலம் தரத்தை சோதித்து விலையை நிர்ணயிக்கும்போது, ஆவின் அவ்வாறு செய்யாதது கலப்படத்தை ஊக்குவிக்கிறது. தரமான பாலுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும். இருப்பினும், கொள்முதல் விலை உயர்வால் ஆவினின் ஆண்டுச் செலவு ரூ.580-590 கோடி அதிகரிக்கும். எனவே சில்லறை விற்பனை விலையும் உயர வாய்ப்புள்ளது. 

கடைசியாக 2019ல் ரூ.6 உயர்த்தப்பட்ட ஆவின் பால், இப்போதும் ஸ்டாண்டர்டைஸ்டு ரூ.44, டோன்ட் ரூ.40 என்ற அளவிலேயே விற்பனையாகிறது. தனியாரை விட ரூ.20-22 குறைவாக உள்ள இந்த விலை, நுகர்வோருக்கு சாதகமாக இருந்தாலும் நிறுவனத்திற்கு சுமையாக உள்ளது. அரசு இருப்புக்களை சமநிலைப்படுத்தி, ஆவினை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்குமா என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: முக்கிய மீட்டிங்கில் உதயநிதி ஆப்சென்ட்.. முதல்வர் விஜய்யுடன் மோதல் தீவிரம்.. பரபரப்பு சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share