கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!
சர்வதேச போர் சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு இன்று உணவகங்கள், சிறு வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
சர்வதேச போர் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கவும் தமிழக அரசு இன்று பல்வேறு அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, டீக்கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவகங்களுக்குக் கூடுதல் மின்சார நுகர்விற்குக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் டீக்கடைகள், கிளவுட் கிச்சன் மற்றும் உணவகங்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் கூடுதல் மின்சார நுகர்விற்கு (Additional Consumption) ரூ.2 மானியம் வழங்கப்படும்.
எரிவாயுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மின் அடுப்புகள் மற்றும் மின் சூடேற்றிகள் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
LPG-க்கு மாற்றாக மண்ணெண்ணெய் அல்லது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தனியாக அனுமதி பெறத் தேவையில்லை என விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் விற்பனையாகாமல் மீதமாகும் உபரிப் பாலினை, ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களே முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேங்கியுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நேரடியாக உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக இம்மாத ஒதுக்கீட்டில் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைகள் அனைத்தும் சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும் வரை தொடரும் எனத் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!