அடிப்படை அறிவு கூட திமுக வழக்கறிஞர்களுக்கு இல்லை..! ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு..!
வேப்பு மனு ஏற்கப்பட்ட பிறகு வில்லிவாக்கம் தொகுதி TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா களமிறங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பு மனு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது.
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மார்ச் 25ஆம் தேதி வரை என்ன கணக்கு வழக்குகள் இருக்கிறதோ அதனை தான் வெளிப்படையாக கூறிவிட்டதாகவும், சொத்து விபரங்களை எப்படி மறைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
தன் மீது இருக்கும் சொத்து மற்றும் நிறுவனங்கள் குறித்து தான் கூற வேண்டும் என்றும் அது குறித்து முழுமையான விவரத்தை வெளியிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தனது குடும்பத்தில் இருப்பவர்கள் மீது உள்ள நிறுவனங்கள் குறித்தும் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார். ஒரு கம்பெனியில் ஷேர் ஹோல்டராக இருந்தால் தான் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!
டைரக்டராக இருந்தால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படை அறிவு கூட திமுக வழக்கறிஞர்களுக்கு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தான் இருபது முதல் 25 கோடி வரை வருமான வரி செலுத்தி இருப்பதாகவும் வேட்பாளராக களம் இறங்கும் போது சொத்துக்களை மறைப்பார்களா என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!