தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை கொள்ளைகள், கற்பழிப்பு, பாலியல் குற்றம், கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை ஆகிய குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
தூக்கத்தில் இருக்கிற தவெக அரசும் முதலமைச்சரும் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும்... அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பதவியேற்ற வந்தனா கார்க்கை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும்,அதிமுக கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வேலு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி: புதிதாக பதவி ஏற்ற ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கலசப்பாக்கம் செங்கம் சட்டமன்ற தொகுதிகளில் அதிக அளவிலான மலைவாழ் மக்கள் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்டவைகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார் எனவும் அதுமட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறினார்.
இதையும் படிங்க: "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!
தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கேட்டுள்ளதாகவும், தினம்தோறும் கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள், வழிப்பறி, கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை என நாள்தோறும் அரங்கேறி வருவதாகவும்
நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தூக்கத்தில் உள்ளார் எனவும் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பத்திரிக்கையாளர்கள் சொல்கின்ற கருத்துக்களை கேட்டு தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!