×
 

AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!

AI தொழில்நுட்பம் தெரிந்தவருக்கே கட்சி பதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினாரா என அதிமுக விளக்கம் கொடுத்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவருக்கே கட்சிப் பதவி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த தகவல் அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தவறான தகவல் என்று அதிமுக விளக்கம் கொடுத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ சரிபார்ப்பும் இன்றி ஊடகங்கள் சில கருத்துகளை செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளது.

குறிப்பாக இன்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமிபுதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அனைவரும் தகவமைத்துக் கொள்ள் வேண்டும் எனவும், இன்றைய AI காலத்திற்கு ஏற்ப கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "இதான் DOUBT"..! திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீவிபத்து..! தவெக அரசுக்கு EPS கோரிக்கை..!

இக்கருத்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய செயல்பாட்டு பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும். மேலும், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரின் தேர்தல் பணிக்கும் உழைப்பிற்கும் பொதுச் செயலாளர் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை வேறுமாதிரியாக திரித்து, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது என்பது கழகத்திற்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனதை சோர்வடையச் செய்துவிடும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டு இழப்பு பிரச்சனை..!! மருத்துவக் கல்வி விவகாரத்தில் வெடித்த எடப்பாடி பழனிசாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share