×
 

முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... அதிமுக பிரமுகர் வெறிச்செயல்...!

காஞ்சிபுரத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு, தேர்தல் முன்பகை காரணமாக அதிமுக-வை சேர்ந்த மற்றொரு நிர்வாகி வெறி செயல்

காஞ்சிபுரம் மாநகராட்சி பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெரு சேர்ந்தவர் கண்ணபிரான், முன்னாள் அதிமுக கவுன்சிலரான இவர், அந்தப் பகுதியின் வட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கண்ணபிரான் தனது வீட்டு வாசலில் அமர்ந்து  நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது சரவணன் என்ற மற்றொரு அதிமுக பிரமுகர்,வீச்சு அரிவாள் கொண்டு வந்து திடீரென கண்ணபிரானை கண்மூடித்தனமாக வெட்டி உள்ளார்.

இதில் கழுத்து கை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியான வெட்டு காயங்களுடன் சரிந்த கண்ணபிரானை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணபிரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார்  விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக கண்ணபிரானை வெட்டிவிட்டு தப்பி ஓடிய  சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

இதையும் படிங்க: ம.செ.கூட்டத்தில் வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி... ஆடிப்போன மாஜி அமைச்சர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share