எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!
திமுக தலைவருக்கு பொது வெளியில் எதிர் நடவடிக்கை செயல்படுத்தப்படும் என பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி விட்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவருக்கு பொது வெளியில் எதிர் நடவடிக்கை செயல்படுத்தப்படும் என பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் திண்டுக்கல் சீனிவாசன் எம் ஆர் விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளான தேர் நிலையம், மத்திய பேருந்து நிலையம் காந்தி சிலை சிக்னல் திருவள்ளுவர் திடல் போன்ற பகுதிகளில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம்,எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.
அத்துடன் “பெண்களுக்கு எதிராக அதிமுக என்ற தலைப்பில், பெண்களை இழித்தும் பழித்தும் பேசி வரும் அதிமுகவினரை கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம். பொள்ளாச்சி அனைத்து மகளிர்” என வாசகங்களுடன் ரவுண்டானாக்களில் உள்ள கம்பங்களில் முன்னாள் அமைச்சர்களின் உருவப் படங்கள் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் உடனடியாக அந்த கட்அவுட்டுகளை அகற்றினர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...!
இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வரவு செலவு பார்வையாளர் ஸ்ரீதர் டோரா சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ண சாமியை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அதிமுக அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி வைத்த நபர்களை கண்டறிந்து உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் திமுக முக்கிய தலைவர்களின் உருவ பொம்மைகளை, இது போன்று நாங்களும் வைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!