×
 

கண்ணகி போல் நீதி கேட்க வந்துள்ளார் பொற்கொடி! திரு.வி.க. நகரில் அதிமுக - பகுஜன் சமாஜ் கூட்டணி அதிரடி!

திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் நான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் இந்த தொகுதியில் உள்ள அனைவரும் சட்டமன்ற உறுப்பினர். - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.

சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் இன்று ஒட்டேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் வேட்பாளர் மாற்றம் குறித்துத் தனது பாணியில் கடுமையாக விமரிசித்தார்.

நேற்று பாஜக தரப்பில் திமுக அரசுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று ஜெயக்குமார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைக் கையில் எடுத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை மாற்றியுள்ளது. ஆனால், இதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. உள்ளே இருக்கும் சரக்கு ஒன்றுதான், பாட்டில்தான் வேறு என நக்கலாகக் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏழை எளிய குடும்பங்களுக்குப் பிரிட்ஜ் (Refrigerator) வழங்கப்பட உள்ளது. இதனால் இனி வீடுகளில் சண்டையே வராது. இரவில் சமைத்த குழம்பைப் பிரிட்ஜில் வைத்துவிட்டு, காலையில் அப்படியே உணவிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பெண்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என நகைச்சுவையுடன் பேசினார்.

இதையும் படிங்க: கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

தனது கணவரைப் படுகொலை செய்த உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இன்று கண்ணகியைப் போல நீதி கேட்டுப் போட்டியிடுகிறார். ஏப்ரல் 23-ஆம் தேதிக்குப் பிறகு (தேர்தல் முடிந்து) இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்" என எச்சரித்தார்.

என் கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது முதல் இலக்கு. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதிபடத் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், நான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் அல்ல. இந்தத் தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களுமே சட்டமன்ற உறுப்பினர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் குரலாக நான் இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், சென்னையில் அதிமுக கூட்டணியின் இந்தப் பிரசாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வையே அதிமுக தனது பிரதான ஆயுதமாக முன்வைத்து வருகிறது.

இதையும் படிங்க: விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share