×
 

திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார் இபிஎஸ்..!! சிவி சண்முகம் அதிரடி பேச்சு..!!

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்தது என்று சிவி சண்முகம் கூறினார்.

அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளை கடுமையாக விமர்சித்தார். எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், தமிழக அரசியலில் தவெகவுக்கு (திருமாவளவன்) ஆதரவு அளிப்பதற்கான காரணங்களை விளக்கினார். “தமிழகத்துக்கு மிகப்பெரிய வரலாற்று வாய்ப்பு வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என யாரும் எதிர்பார்க்காத, சிந்திக்காத அரிய சந்தர்ப்பம்” என்று சண்முகம் கூறினார். 

திமுக தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அதிமுக அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். “திமுகவுடன் கூட்டணி சாத்தியமில்லை என்றாலும், திருமாவுக்காக செய்யலாம் என நாங்கள் ஒப்புக்கொண்டோம். திருமாவளவன் முதல்வராக இருக்க, அமைச்சரவையை திமுகவும் அதிமுகவும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற பரிந்துரை வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை நிராகரித்துவிட்டார். ‘நான்தான் முதலமைச்சராகப் போகிறேன்’ என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்” என்றார். 

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக தெரிவித்தபோதும் எடப்பாடி அதை ஏற்கவில்லை என்று சண்முகம் சுட்டிக்காட்டினார். “திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார். பாஜகவும் ஆதரவு அளித்துவிட்டதாக அவர் கூறினார். திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். யாருக்கு பதவி ஆசை என்பதை எடப்பாடி தன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த ஆஃபர்... அதிமுகவை சல்லி, சல்லியாய் உடைத்த சி.வி.சண்முகம்... கடைசி டீல் என்ன தெரியுமா?

கட்சியில் எந்தப் பிளவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்த சண்முகம், தேர்தல் முடிவு அன்று இரு திமுக முன்னாள் அமைச்சர்கள் தனக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும், மறுநாள் காலையில் எடப்பாடி “திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போகிறோம்” என்று அறிவித்ததாகவும் தெரிவித்தார். “அந்த இருவர் யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை” என்று அவர் கூறினார்.

மேலும், “பெரும்பான்மை எம்.எல்.ஏக்களால் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.பி. வேலுமணிதான். எடப்பாடி கொடுத்துள்ளது போலி கடிதம். எம்.எல்.ஏக்கள்தான் கொறடாவை நியமிக்க முடியும். பொதுச் செயலாளர் அதற்கு உரிமை இல்லை” என்று சண்முகம் விளக்கினார். இந்தப் பேட்டி, அதிமுகவுக்குள் நிலவும் உள் மோதல் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி சம்பந்தமான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “சொந்த மாவட்டத்துல என்ன கிழிச்சீங்க... இபிஎஸ் போட்ட பிச்சையில...” - சி.வி.சண்முகம் அண்ட் டீமை வெளுத்து வாங்கிய அதிமுக ஐ.டி. விங்க்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share