×
 

#BREAKING காலையிலேயே அதிர்ச்சி... சுக்கு நூறாக விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம்... 7 பேர் உயிரிழப்பு...!

ராஞ்சி அருகே ஏர் ஆம்புலன்ஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த ஏர் ஆம்புலன்ஸ் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. டெல்லியை சேர்ந்த ரெட் பேர்ட் ஏர்வேஸுக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தீக்காயம் அடைந்த ஒரு நோயாளியை மேல் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லிக்காக அழைத்து சென்று கொண்டிருந்த பொழுது தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த கோர விபத்தில் ரொம்ப மோசமான விஷயம் என்னவென்றால் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் அந்த நோயாளியுடன் பயணித்த மருத்துவர்கள், உதவியாளர்கள், விமானிகள் என மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சியிலிருந்து நேற்று இரவு ஏழு 11 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் அடுத்த 23 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மோசமான வானிலை தான் இந்த விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமான தகவல்கள் சொல்லப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மோசமான வானிலையாக இருக்கின்றது. எனவே வேறு பாதையை தனக்கு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் விமான கட்டுப்பாட்டு மையம் பதிலளிப்பதற்கு முன்னதாகவே அந்த விமானத்தின் தொடர்பு உடனடியாக துண்டித்திருக்கிறது.  

விமானம் இரவு 7.30 மணியளவில் காணாமல் போனதாகவும், சிமாரியாவில் உள்ள பரியாட்டு பஞ்சாயத்து பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லியை தளமாகக் கொண்ட திட்டமிடப்படாத நிறுவனமான ரெட்பேர்டின் விமானக் குழுவில் விபத்துக்குள்ளான விமானம் உட்பட ஆறு விமானங்கள் உள்ளன.

இதையும் படிங்க: வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி அனந்த் சின்ஹா தனது நோயாளிக்காக ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். லதேஹர் மாவட்டத்தில் உள்ள சந்த்வாவைச் சேர்ந்த சஞ்சய் குமார் (41) என்ற நோயாளி பிப்ரவரி 16 ஆம் தேதி 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் நோயாளியை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share