தமிழ்நாட்டின் முதல் ஓட்டு... தல ஓட்டு... முதல் ஆளாக வாக்களித்த அஜித்... ரசிகர்களால் வாக்குச்சாவடிக்குள் களேபரம்...!
காலை 7 மணிக்கு முன்னதாகவே தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பெல்ஜியத்தில் முகாமிட்டிருந்த நடிகர் அஜித்குமார் ஜனநாயக கடமையாற்றுவதற்காக நேற்று சென்னை திரும்பினார். துபாயில் இருந்து சென்னை வந்துள்ளார். நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சினிமாவில் நடித்துக்கொண்டே, சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித்குமார் பிஸியாக இருந்தாலும் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் அளித்து சென்னை வந்தது சோசியல் மீடியாக்களிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.
இதனிடையே, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் வருகை புரிந்தார். வாக்குச்சாவடியில் காலை 6 மணியில் இருந்தே காத்திருந்த ரசிகர்கள் அஜித்தைக் கண்டதும், ஆராவாரத்துடன் ஓடி வந்து, அவரை சூழ்ந்து கொண்டனர். வெள்ளை நிற கோட் சூட், தலையில் கண்ணாடியுடன் செம்ம ஸ்டைலாக வாக்களிக்க வந்த அஜித்திடம், சில ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அஜித்தை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: விஜய் ஏமாத்திட்டா என்ன? நம்ம அஜித் இருக்காரே!! அதிமுக புதிய ப்ளான்! எடப்பாடியாருக்கு ஏக குஷி!
அதற்குள் ரசிகர்கள் வாக்குச்சாவடிக்குள்ளும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த துணை ராணுவப்படையினர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த ரசிகர்களை வெளியேற்றினர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்னதாக வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். பின்னர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி காலை 7 மணிக்கு முன்னதாகவே தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை நடிகர் அஜித்குமார் காண்பித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜனநாயக திருவிழா...!! - தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... ஆர்வத்துடன் குவிந்த மக்கள்...!