×
 

சூடு பிடிக்கும் ஆகாஷ் மரண வழக்கு... 20 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை..!!

ஆகாஷ் மரண வழக்கு தொடர்பாக 20 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

ஆகாஷ் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் என 20 பேரிடம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் மகன் ஆகாஷ் டெலிசன் (26) குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு சென்ற நிலையில் அவர் தப்பியோடிய போது காயம் ஏற்பட்டதாக கூறி கடந்த 7ஆம் தேதி மதியம் 1.15 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 8ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து 9ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது.  பிரேதப் பரிசோதனையில், ஆகாஷ் டெலிசன் உடலில் மொத்தம் 28 வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

ஆகாஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வருகின்றனர். கொலை வழக்கு மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 6 காவலர்களை பணியிடை நீக்கம் ஐஜி உத்தரவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு... ஆகாஷ் மரண வழக்கு... இன்று முதல் களத்தில் இறங்கியது சிபிசிஐடி...!

இந்த வழக்கில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 6 பேர் உள்பட சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், காவல்நிலைய பணியில் இருந்த காவலர்கள் என 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டதாக சிபிசிஐடி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... ஆகாஷ் மரண வழக்கில் களமிறங்கிய சிபிசிஐடி... ஆய்வாளருக்கு கொடுத்த அதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share