×
 

அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல., சமத்துவம் பற்றியது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் உருவாகும் என்று கூறினார். இந்திய மொழிகள் நாட்டின் கலாச்சாரத்தின் மணிகள் என்றும், அவை இல்லாமல் இந்திய அடையாளம் முழுமையடையாது என்றும் அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டு மொழிகளால் நமது கலாச்சாரம், வரலாறு, மதத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. இந்தியத்தன்மையுடன், நமது மொழிகளில் நாட்டை நடத்தி, உலகை வழிநடத்துவோம் என்று அவர் கூறியிருந்தார்.

அமித்ஷாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் ஆங்கில மொழி தொடர்பான அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  ஆங்கிலம் ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி என்று கூறியுள்ளார். சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ தொந்தரவாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கக் கற்பிக்கின்றன எனவும் அதன் வலுவான தேசிய பெருமையுடன் கூடிய சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்

ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடியினராக சித்தரிக்க விரும்புகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அன்பில் மகேஷ், அது நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக அது ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எழுச்சி பெற அதிகாரம் அளிப்பதால் அவர்கள் எதிர்ப்பதாகவும் கூறினார். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். இது மொழி பற்றியது அல்ல., இது கட்டுப்பாட்டைப் பற்றியது.

திமுகவில், அனைவருக்கும் அணுகல் தமிழ் அடையாளத்திற்காகவும், ஆங்கிலம் வாய்ப்பிற்காகவும் நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது, ஒரு ஏணியாக இருக்க வேண்டும் என்ற அன்பில் மகேஷ் கூறினார். அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல.,அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share