‘அம்மா குடிநீர்’ அவ்வளவு தானா? - விரைவில் வருகிறது ‘அப்பா குடிநீர்’... அதிர்ச்சியில் அதிமுக...!
அம்மா குடிநீர் திட்டம் சில ஆண்டுகளாக முடங்கி உள்ள நிலையில விரைவில் அப்பா குடிநீர் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா குடிநீர் திட்டம் சில ஆண்டுகளாக முடங்கி உள்ள நிலையில விரைவில் அப்பா குடிநீர் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக கும்மிடிப்பூண்டியில் 2.47 ஏக்கர் பரப்பளவில் 10.5 கோடியில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வந்தது.
தினமும் 2 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பேருந்து நிலையங்களில் ஏழை மக்களுக்கு எளிதாக வாங்கும் வகையில் 10 ரூபாய்க்கு 1 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது. தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 20 ரூபாய்க்கும் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே நிலையங்களில் 1 லிட்டர் தண்ணீர் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில தமிழக அரசின் அம்மா குடிநீர் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: தீர்ப்பு வெளியான 6 மணி நேரத்திற்கு பிறகு... தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபர பதிவு...!
ஆனால் ஜெயலலிதாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட அம்மா குடிநீர் திட்டம், அவரது மறைவுக்கு பிறகு உற்பத்தி குறைவு மற்றும் கொரோனா போன்ற காரணங்களால், உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு, அம்மா குடிநீர் விற்பனை பல இடங்களில் மெல்ல மெல்ல மூட தொடங்கியது. தற்போது தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் விற்பனை முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. சில அரசுத்துறைகள் பொறுப்பை மாற்றுவதில் தாமதம் காட்டுவதால் இது முடங்கி போனதாக செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்த பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் இயக்கப்படும் டீலக்ஸ் ஏசி விரைவு பேருந்துகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த மாதிரி நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பது இல்லை என அதிக அளவிலான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தான் மீண்டும் அரசு போக்குவரத்து கழகங்களில் பயணிகள் வசதிக்காக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதற்கு “அப்பா குடிநீர்” என பெயர் வைக்க ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தமிழக அரசு பெயரை முடிவு செய்யும் எனவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஒரு லிட்டர் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கேஸ் வாபஸ் வாங்கு காசு தறோம்… பேரம் பேசிய திமுக? தோலுரித்த அதிமுக…!