கேஸ் வாபஸ் வாங்கு காசு தறோம்… பேரம் பேசிய திமுக? தோலுரித்த அதிமுக…!
சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்தவரை வாபஸ் வாங்க சொல்லி திமுக நிர்வாகி வலியுறுத்திய சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் சம்பவத்தில் குடும்பத்தில் இரண்டு உயிர்களை இழந்த பிரபாகரன் என்பவர் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்ததாகவும், பணம் தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி வழக்கை திரும்ப பெற திமுக ஒன்றிய செயலாளர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம் என்று அதிமுக கூறியுள்ளது.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் தான் வழக்கே தொடராததாக தவறான செய்தி வெளிவந்ததாகவும் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளது.
இதற்கிடையில் இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார் என்றும் ஏன் பதறுகிறீர்கள் என்றும் திமுக என்ன தவறு செய்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள் என்றும் ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார் எனவும் எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!
திமுகவின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை என்றும் திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது எனவும் சாடிய அதிமுக, வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார் என்றும் அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!