அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!
அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் பாமக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது.
பாமகவில் தந்தை மகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தந்தை தைலாபுரத்திலும் மகன் திருவள்ளூரிலும் அவசர ஆலோசனை மேற்கொள்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இருதரப்பினரும் மாறி மாறி ஆலோசனையில் நடத்துகின்றனர். மகன் ஆதரவாளர்களை தந்தையும், தந்தை ஆதர்வாளர்களை மகனும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். தான் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் தைலாபுரம் வருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்புமணி தானே பாமக தலைவர் எனக் கூறி வரும் நிலையில் அடுத்த கட்டம் குறித்து ராமதாஸ் ஆலோசிக்க உள்ளார். பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பாமக தலைவராக அதிகாரப்பூர்வமாக மாற்ற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.. கட்சியை தன் கைவசம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாமக நிர்வாகி சுட்டுக்கொலை! அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாசின் வலதுகரமாக செயல்பட்ட அன்பழகனை பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கி உள்ளார். பாமக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து அன்பழகன் நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். அன்பழகனை நீக்கிய நிலையில், புதிய தலைமை நிலைய செயலாளராக செல்வகுமார் என்பவரை அன்புமணி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
பணம் பெற்றுக் கொண்டு பொறுப்புகளை வாங்கிக் கொடுத்ததாக அன்பழகன் மீது அன்புமணி சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்கி வருவதால் பாமகவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: நாளை கலகலக்கப்போகும் தைலாபுரம்... அப்பா ராமதாஸ் ‘ராக்’... மகன் அன்புமணி ‘ஷாக்’...!