×
 

எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

பாதிக்கப்பட்ட பெண்கள் எதற்கும் பயப்படாமல் புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் ஐந்து மாதங்களுக்குள் குற்றவாளி தண்டிக்கப்பட்டார் என தெரிவித்தார் .

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விரைவாகவும், ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்பட்டது என்றும் டிசம்பர் 23 ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விரைவாக தீர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சரியான தண்டனை வழங்கப்பட்டது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: குற்றவாளி ஞானசேகரனுக்கான தீர்ப்பு விபரங்கள்..! ஆர்டர் காப்பியை ஒப்படைத்த நீதிமன்றம்..!

தமிழக முதல்வரின் கூற்றுப்படி நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கு ஆளான பெண்கள் தயங்காமல் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அந்த சார் யார்? அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்.. சந்தேகம் எழுப்பிய தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share