×
 

ஆட்டத்துக்கு நான் வரல! தேர்தலில் போட்டியிட NO சொன்ன அண்ணாமலை? பாஜகவில் சலசலப்பு...

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தீவிரமான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசியலில் பாஜகவின் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் திட்டங்கள், கட்சியின் உள்ளூர் தலைமை, மற்றும் கூட்டணி உத்திகள் முக்கிய காரணங்களாக உள்ளன. 

2026 தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கு முனைப்புடன் செயல்படுகிறது. கடந்த தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கத்தால் பாஜகவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், மத்திய அரசின் ஆதரவு மற்றும் உள்ளூர் மக்களின் புதிய அரசியல் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்தி கட்சி தனது அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: உங்க கட்சிக்காரங்க கல்லா கட்ட மக்களை காவு வாங்குவீங்களா? பூந்து விளாசிய அண்ணாமலை!

பாஜகவின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தேர்தல்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் கட்சியின் அமைப்பை ஒருங்கிணைத்து, தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் மற்றும் விரும்பும் தொகுதிகள் குறித்து நயினார் நாகேந்திரன் கேட்டறிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணாமலையை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசியதாக தகவல் கசிந்துள்ளது. அப்போது, தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை நயினார் நாகேந்திரனிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share