×
 

அண்ணாமலையின் இயக்கத்திற்கு குவியும் ஆதரவு..! 5 லட்சத்தைக் கடந்த தன்னார்வலர்கள் சேர்க்கை..!

அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கத்தின் 5 லட்சத்தை கடந்த தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் அவர் அறிவித்த இந்த இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அவரது அழைப்பு வெளியான சுமார் மூன்றரை மணி நேரத்திற்குள் wetheleader.org இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  அண்ணாமலை தனது அறிவிப்பில், "We The Leaders" அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை அழைத்தார். இந்த இயக்கம் அடிமட்ட மட்டத்தில் தலைமைத்துவத்தை வளர்ப்பதையும், சமூக மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்ணாமலை தனது அறிவிப்பில், இணையதளம் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கத் தொடங்குவதாகவும், கோயம்புத்தூரில் ஏபிஜே அப்துல் கலாம் அரசியல் நெறிமுறைகள் மையத்தை அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். இங்கு தேர்தல் வேட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: யாருடைய பினாமி அண்ணாமலை?! யாருக்காக இயக்கம் துவக்கம்?! முத்தரசன் விளாசல்!

இந்த அழைப்பு வெளியான உடனேயே தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்ததாக ஆரம்பக் கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் மூன்றரை மணி நேரத்தில் ஐந்து லட்சத்தைத் தாண்டியது. தற்போது இணையதளத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வேகம் அண்ணாமலையின் செல்வாக்கையும், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது. 

இதையும் படிங்க: கூண்டோடு காலியாகும் பாஜக... அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share