×
 

"தமிழ் வழி கல்வி"..! காவலர்களுக்கான உரிமையை காப்பாற்றுங்கள்..! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்..!!

காவலர்கள் உரிமை விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல் ஒன்றை முன்வைத்தார்.

தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்" கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி,TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால்,TNUSRB மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றார். 

உதவி ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் கீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றும் ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, PSTM சட்டத்தின்படிவழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!

இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். எனவே, தவெக அரசு, உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, PSTM முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share