×
 

அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த அரசாணை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அரசு மருத்துவர்களின் ஊதியம், பதவி உயர்வு, சேவை நிபந்தனைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டது. இந்த அரசாணையின் முக்கிய அம்சங்கள், தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக அல்லது அவர்களுடன் ஒப்பிடத்தக்க அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்பதும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய அமைப்பை மறு ஆய்வு செய்து தேவையான உயர்வுகளை வழங்க வேண்டும் என்பதும் ஆகும். 

உங்கள் தந்தை கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மருத்துவர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் தற்போது அரசு மருத்துவர்களின் குரலை திட்டமிட்டு மவுனப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும் கூட, திமுக அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை எனவும் தெரிவித்தார். அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது., DACP ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக அரசு மருத்துவர்களைக் கைது செய்வது, பணியிட மாற்றம் செய்வது என, தண்டித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு இன்னும் அரசு வேலை வழங்கவில்லை என்றும் போராட்ட களத்தில், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர், மணிக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்ததோடு சரி., சுகாதாரத்துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் முடிந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.  உடனடியாக, அரசாணை எண் 354 அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் மணிக்குமார் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share