×
 

இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?

கோவையில் நடைபெற்ற இசைஞானியின் இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கினார் அண்ணாமலை.

70, 80, 90ஸ்-களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் இசைஞானி இளையராஜா. 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களிலும் ராஜாவாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். மேலும் இளையராஜா சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற 'சிம்பொனி' நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து ஒட்டுமொத்த தமிழர்களுக்குப் பெருமிதம் அளித்தார்.

இந்நிலையில் சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்குப் பிறகு, இளையராஜா தனது முதல் இசை நிகழ்ச்சியை கோவையில் நடத்தியுள்ளார். மௌன ராகம் முரளி சார்பில், கோவை, கோவைப்புதுார் 'ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி' மைதானத்தில், நேற்று இளையராஜா இசைக்கச்சேரி நடந்தது. இரவு 7:20 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் இளையராஜா, கங்கை அமரன், யுகேந்திரன், ஹரிசரண் உட்பட, 20க்கும் மேற்பட்ட பாடகர்கள் பல்வேறு காலகட்டங்களில் இருந்து 40 பாடல்களை பாடினர். இந்த இசை நிகழ்ச்சியை காண, கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்தனர். 

இதையும் படிங்க: வெடிகுண்டு இருக்குமோ? கோவை ஏர்போர்ட்டில் தனியாக கிடந்த பையால் பரபரப்பு..!

மேலும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மேடையில் இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கியதோடு, அவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இளையராஜா இசைக் கடவுள் எனப் புகழாரம் சூட்டிய அண்ணாமலை, சந்தோஷம், துக்கம் என அனைத்து நேரத்திலும் இசைஞானியின் இசை நம்முடன் இருந்துள்ளது. பிரதமர் மோடி முதல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா உள்ளார். லண்டனில் 'சிம்பொனி' செய்து விட்டு இளையராஜா கோவை வந்ததற்காக, நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்,'' என்றார்.

இதனிடையே, இசைஞானியின் இசையை நேரில் கேட்டு ரசித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் இது 'கோவையின் பெருமிதம்' என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

முன்னதாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கபட்டது. அப்போது பேசிய இளையராஜா, நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது, என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார் எனவும், இப்போது வரை அது என்னிடம் இருக்கின்றது, அதை பயன்படுத்தி வருகின்றேன் என தெரிவித்தார். கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என கூட சொல்ல முடியாது, கோவையை நான் பிரிவது கிடையாது எனவும் இசைஞானி இளையராஜா பேசினார். 

இதையும் படிங்க: அடிச்ச எல்லா பந்துமே சிக்ஸ் தான்..!! கிரிக்கெட் விளையாடி அசத்திய எஸ்.பி வேலுமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share