அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!
அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்றும், கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.
இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தபோது முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார். “எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் ராஜினாமா செய்யவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை யாரிடமும் பேசவில்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளையில், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்
. “திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்கின்றன” என்றார். முதலமைச்சர் விஜய் பாட்டிலுக்கு ரூ.10 என்று பேசியதை சுட்டிக்காட்டிய அவர், “ஆனால் அவரது ஆட்சியிலும் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!
மேலும், “முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வதாகத் தெரியவில்லை. இது சிறுபான்மை அரசா அல்லது சிறுபான்மையினருக்கான அரசா என்பதை விஜய் விளக்க வேண்டும். கொச்சையான வார்த்தைப் பயன்பாட்டை அவர் தவிர்க்க வேண்டும்” என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அண்ணாமலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ள செய்தி வெளியான பின்னணியில், பாஜக மாநிலத் தலைவரின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்ணாமலை பிறந்தநாள் சந்தர்ப்பத்தில் புதிய கட்சி தொடங்கும் வதந்திகள் பரவிய நிலையில், நயினார் நாகேந்திரனின் தெளிவான பதில் பாஜகவுக்குள் ஒற்றுமை நிலவுவதாகக் காட்டுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?