×
 

அவதூறு பேச்சு, அபாண்ட பழிதான் திமுகவுக்கு வாடிக்கை..! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

அவதூறாக பேசுவது, அபாண்டமாக பேசுவது தான் திமுகவின் வாடிக்கை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான அவதூறு பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வழக்குத் தொடர்ந்திருந்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கில் தொடர்புபடுத்தி ஆர்.எஸ். பாரதி பேசியதற்கு எதிரான வழக்கில் அண்ணாமலை இன்று ஆஜராகினார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை சதி திட்டம் தீட்டியதாக பேசி அவர் இருந்தார் என்றும் அவதூறு பரப்புவது, அபாண்டமாக பேசுவது திமுகவின் வாடிக்கை என்றும் விமர்சனம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் தனது சாதனைகளை சொல்ல வேண்டுமென்றும் கண்ணீர் வடிக்கக்கூடாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவுக்காக தான் கண்ணீர் வடிக்க வேண்டுமே தவிர அதிமுகவுக்காக அல்ல எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அந்த கட்சியை பாஜக விழுங்கி விட்டதா என்ற கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக அண்ணாமலை பேசி இருந்தார்.

இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

ஹார்முஸ் நீரினையை ஈரான் மூடி வைத்துள்ளதால் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார். ஆர்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் டி.ஆர். பாலு மீது இரண்டாவது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கின் விசாரணைக்கு டி.ஆர். பாலு மற்றும் ஆர்.எஸ். பாரதி என யாரும் வரவில்லை என்றும் தங்கள் தரப்பு ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share