#BREAKING: திமுகவில் இணைந்த EX. எம்பி அன்வர் ராஜா.. முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்..!
அதிமுக கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
அன்வர் ராஜா, தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்வர் ராஜா, இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1972 இல் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியில் உறுப்பினராக இருந்தவர். 2001-2006 ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
மேலும் 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிறுபான்மையினர் நலப் பிரிவின் முக்கிய தலைவராகவும், அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். அன்வர் ராஜாவின் அரசியல் பயணத்தில், பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணி குறித்து அவர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
2021 இல், பாஜக கூட்டணி மற்றும் இரட்டை தலைமை குறித்து விமர்சித்ததற்காகவும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதற்காகவும், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், 2023 ஆகஸ்ட் 4 அன்று, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. அவர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுகவில் இருந்து அன்பர் ராஜாவை நோக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உன்கிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: அதிமுகவுல அது இருக்கு.. திமுகவுல அது இல்ல.. உண்மையை புட்டு, புட்டு வைத்த திருநாவுக்கரசர்..!