சட்டப்பேரவை மாண்பை காப்பாற்றுங்க விஜய்.! தகாத வார்த்தைகள்... அப்பாவு காட்டம்..!!
சட்டப்பேரவை மாண்பு காக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு அவர்கள் சட்டப்பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி பேரவை சார்பாக பல மாநில சட்டமன்றங்களுக்குச் சென்று நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கேள்வி நேரம், முக்கிய நிகழ்வுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் ஆகியவை பேரவை விதிகள் மற்றும் மரபுகளுக்குட்பட்டு மாண்போடு முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டன.
திமுக ஆட்சியில்தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டு காகிதமில்லா சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. 1921 முதல் 2021 வரையிலான அனைத்து சட்டமன்றப் பதிவுகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகின் எந்த மூலையிலிருந்தும் அவற்றை அறிய ஏற்பாடு செய்யப்பட்டதும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலத்தில்தான் நடைபெற்றது. இவை அனைத்தும் சட்டமன்ற வரலாற்றில் முக்கிய அம்சங்களாகும்.
சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை ஒளிபரப்பப்பட்டால் உறுப்பினர்கள் தவறுதலாக ஒரு கருத்தைப் பேசி மக்களிடையே அமைதியின்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க நேரலையை 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம் என்றும், இது குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளித்து மு.க.ஸ்டாலின் 2.0 ஆட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கடந்த திமுக ஆட்சியின் நோக்கமாக இருந்தது என அப்பாவு குறிப்பிட்டார்.தற்போது அமைச்சர்கள் மரபு மீறி பேசும் வார்த்தைகளைப் பேரவைத் தலைவர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய பின்னரும் ஆளும் கட்சி நிர்வாகிகள் ரீல்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுக்கவே 10 நிமிடங்கள் தாமத ஒளிபரப்பு முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: "வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!
பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் முதல்வரை மிரட்டும் தொனியில் பேசியதை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பலாம் என முடிவு செய்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேரவைக்குள் பூட்டுவேன், கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்று முதல்வர் பேரவைக்கு வெளியே மிரட்டியதும் அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். அதுதான் சட்டமன்ற மாண்பு.ஆறு அதிமுக உறுப்பினர்களின் ராஜினாமா விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைப் போல திமுக உறுப்பினர் பேசிய விவகாரமும் நீதிமன்றத்தில் உள்ளது.
இரண்டையும் ஒரே நிலையில் பார்க்காமல் ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பது பேரவை மாண்பல்ல. எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் பொது நலன் சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகப் பதிலளிக்காமல் வரம்பு மீறி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை வம்புக்கு இழுக்கும்போது, எதிர்க்கட்சியினர் பயன்படுத்தும் வார்த்தைகள் மட்டும் பூதாகரமாக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அப்பாவு வலியுறுத்தினார்
இதையும் படிங்க: "ரீல்ஸ் முதல்வரே.. கர்நாடகாவுக்கு துணை போகும் டப்பிங் முதல்வரே"..! வெட்கமா இல்லையா.? அப்பாவு காட்டம்.!!