×
 

"வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!

தமிழக முதல்வருக்கு பலவீனம் என அப்பாவு குறிப்பிட்டார்.

சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென்மாநிலங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வர வேண்டும் என்று கூறி இருப்பது தமிழக முதல்வரின் பலவீனத்தை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அதே மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் "நீர் பங்கீடு" என்பது "நீர் ஒத்துழைப்பு" என மாற வேண்டும் என்றும் மேகதாது அணை தமிழகத்திற்காக கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்றும் பெங்களூரு குடிநீருக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தவிர மீதி அனைத்தையும் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுவோம் என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் உத்தரவாதமாக அளித்துள்ளோம் என்று அவர் பேசியது அனைத்தும் வஞ்சக வார்த்தை CM sir என கூறினார்.

தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் மூலம் சதி திட்டம் தீட்டி மிரட்டுவதற்கு முதல்வர் ஜோசப் விஜய் துணை போகலாம் என்றும் திமுகழகம் உள்ளிட்ட கட்சிகளும் தமிழக மக்களும் ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

கலைஞர் அமைத்த "காவிரி தீர்ப்பாயம்" தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் "காவிரி மேலாண்மை வாரியமாக" தந்த தீர்ப்பை, தட்டிப்பறித்து காவிரி மேலாண்மை ஆணையமாக மாற்றி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த #காங்கிரஸ்- பாஜக-வோடு தமிழக முதல்வரும் சேர்ந்து மேகதாது அணை கட்டிவிடலாம் என்ற உங்கள் கனவு திமுக தலைவர் முகஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக மக்களோடு சேர்ந்து உங்களை ஆட்சியிலிருந்தே ஓட ஓட விரட்டியடிப்பார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: என்றும் புகழோடு வாழ்வார் சௌகார் ஜானகி! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share