அவசரகதியில் SIR… சந்தேகம்..! தவெக அருண் ராஜ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!
தேர்தல் நேரத்தில் அவசரகதியில் எஸ் ஐ ஆர் பணிகள் நடத்தப்படுவது சந்தேகத்தை கிளப்புவதாக அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ்ஐஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ் ஐ ஆர் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு
இதையும் படிங்க: விறுவிறு SIR… வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாட்டில் பிரச்சனை… அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை…!
அவசரகதியில் வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளுக்கே புரிதல் இல்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். தமிழக வெற்றி கழகத்தினருக்கு எஸ் ஐ ஆர் படிவங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். பல சந்தேகங்கள் எஸ் ஐ ஆர் பணியில் இருப்பதாகவும் ஆனால் தேர்தல் ஆணையம் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் அவசரகதியில் வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொண்டால் முடிவு விபரீதமாக இருக்கும் என்று கூறினார். வாக்காளர் திருத்தப் பணிகளை அடுத்த வருடம் பொறுமையாக செய்து இருக்கலாம் என்றும் அவசரகதியில் நடத்துவது சந்தேகத்தைக் கிளப்புவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் SIR… தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்... ஸ்தம்பித்த சென்னை...!