தமிழ்நாடு தளபதி கோட்டை.. அவர் FIELD-க்கு வந்தாருன்னா..! அருண் ராஜ் பவர் ஸ்பீச்..!
தமிழ்நாடு தளபதி கோட்டை என்றும் அதில் சேலம் இரும்பு கோட்டையாக இருக்கும் எனவும் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் பெரும்பாலும் கண்டன அறிக்கைகளுடன் நின்றுவிட்டதாகவும், கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு 250 நாட்களுக்கு மேல் ஆகியும் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. விஜய்யின் கட்சி தொடர்பான செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர் உறுப்பினர் சேர்க்கை, கட்சிக் கொடி மற்றும் பாடல் அறிமுகம், மாநாடு நடத்துதல், மாணவர்களுக்கு கல்வி விருது வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மும்மொழிக் கொள்கை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் போன்றவற்றில் அரசை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். ஆனால், களப்பணியாக மக்களை நேரடியாகச் சந்தித்து பிரச்னைகளில் தலையிடுவது குறைவாகவே இருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது தமிழ்நாடு தளபதி கோட்டை என்றும் அதிலும் சேலம் இரும்பு கோட்டையாக இருக்கும் எனக்கும் தெரிவித்தார். பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜர், வேலு நாச்சியார் உள்ளிட்டோர் குறித்து விஜய் பேசியதால்தான் இளைஞர்கள் மத்தியில் அவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதுதான் மற்ற கட்சி தலைவர்களுக்கும் விஜய்க்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறினார்.
இதையும் படிங்க: மக்களோடு விஜய்.. மகிழ்ச்சியில் தொண்டர்கள்! வரும் 4ல் கூடுகிறது தவெக செயற்குழு கூட்டம்..!
சேலத்தில் முக்கியமான மூன்று பிரச்சனைகள் இருப்பதாகவும், மேட்டூர் அணை நிரம்பியும் பல இடங்களில் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்றும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருவதாகவும், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முழுமை அடையவில்லை என்றும் மழை பெய்தால் தண்ணீர் வீட்டுக்குள் வரும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சேலத்தில் பெரிய தொழில் வளர்ச்சி வரவில்லை என்றும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் சேலம் மாவட்டம் தலைச்சிறந்த மாவட்டமாக மாற்றப்படும் என கூறினார்.
வரும் நான்காம் தேதி செயற்குழு கூட்டம் உள்ளதாகவும், கலந்து ஆலோசத்த பிறகு விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக அறிவிப்போம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் களப்பணிக்கு வரவில்லை என்று அரசியல் கட்சிகள் விமர்சிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். விஜய் 25 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியில் இருப்பதாகவும் விரைவில் மக்களை கண்டிப்பாக சந்திப்பார் என தெரிவித்தார். கூட்டணியைப் பொறுத்தவரை அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் தவிர வேறு யாரு வந்தாலும் அரவணைப்போம் என கூறினார்.
இதையும் படிங்க: நல்லது கூட செய்ய முடியல! போலீஸ் ரொம்ப நெருக்கடி தராங்க... புஸ்ஸி ஆனந்த் குற்றச்சாட்டு..!