நல்லது கூட செய்ய முடியல! போலீஸ் ரொம்ப நெருக்கடி தராங்க... புஸ்ஸி ஆனந்த் குற்றச்சாட்டு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இந்த ஆண்டு நிறைய கெடுபிடிகள் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் குற்றம்சாட்டி உள்ளார்.
விஜய்யின் பிறந்தநாளில் ரத்ததானம், கண் தானம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவையும் நடத்தப்படுவது வழக்கம். இன்று விஜய் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்த ஆண்டும் செய்யப்பட்டு வருகின்றன.
தவெக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள், உடைகள் மற்றும் உணவு விநியோகம் செய்யப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கி. சிவக்குமார் தலைமையில் முதியோர்களுக்கு வேஷ்டி, சேலை, மளிகைக் கூடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட தவெக சார்பில் 1000 இனிப்பு பெட்டிகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதையும் படிங்க: "ம்"- னா சிறைவாசம்! ஏன்- னா வனவாசம்.. விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க! கொந்தளித்த விஜய்!!
மேலும், 8வது வார்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், பள்ளி பைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சென்னை மற்றும் மதுரையில் 51 ஆட்டோக்கள் தவெக லோகோவுடன் அலங்கரிக்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் 51 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வருடம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில், நிறைய கெடுபிடிகள் உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது, இங்கு அன்னதானம் கொடுக்கக்கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், அதற்கு தங்களது கண்டனத்தையும் கூறினார்.
இதையும் படிங்க: கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!