×
 

என்ன ரத்த அழுத்தமா? கருப்பு பட்டை அணிந்த அதிமுகவினரை கிண்டல் செய்த சபாநாயகர்...!

கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.

ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

இந்த நிலையில் 6 மாதகால இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கூடியது. கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். 

பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஏதேனும் ஒரு நிகழ்வை கண்டிக்கும் விதத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையோ அல்லது கைகளில் கருப்புப் பட்டையோ அணிந்து வருவது வழக்கம்.

இதையும் படிங்க: எங்க பக்கம் தான் நியாயம் இருக்கு... அன்புமணி தரப்பினர் சபாநாயகரை சந்தித்து முறையீடு...!

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது. சட்டப்பேரவை ஆரம்பித்ததும் எதற்காக கருத்த பட்டை அணிந்து வந்தீர்கள் என்றும் அதிமுகவினருக்கு ரத்த அழுத்தமா எனவும் சபாநாயகர் அப்பாவும் கிண்டலாக கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டுள்ளது. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக கருப்பு பட்டை அணிந்து வந்ததாக அதிமுகவினர் பதில் தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பிக்பாஸ்... உடனே நிறுத்துங்க... கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கிய வேல்முருகன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share