×
 

வாய திறங்க CM..! கதறல் கேக்குதா..? கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்..!!

தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆளுநர் ஆர்லேகர் தலைமையில் உரை நிகழ்த்த உள்ளார்.

இந்த உரையில், மாநில அரசின் புதிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் உரை என்பது அரசின் கொள்கை அறிவிப்புகளின் முக்கிய ஆவணமாகக் கருதப்படுவதால், இது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவை மரபுக்கு ஏற்ப நடைபெறும். ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்த பின்னர், இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின் அலுவல் ஆய்வுக்குழு கூடி, வரவிருக்கும் சட்டசபை அமர்வுகள் குறித்த அட்டவணை, விவாதங்கள் மற்றும் பிற அலுவல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். 17 வது சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். 

இதையும் படிங்க: "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

கூட்டத்தொடருக்கு முன்னதாக தமிழக வெற்றி கழக அரசை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதறல் கேட்குதா சிஎம்..? வாயைத் திறங்க சிஎம்..! ஊரெல்லாம் கற்பழிப்பு… தமிழ்நாடு முதலமைச்சர் வாயை திறங்கள் என்று கோஷமிட்டனர். மேலும், ரீல்ஸ் இங்கே… ரியல் எங்கே..? தற்குறி ஆட்சி தமிழ்நாட்டே சாட்சி… ஹீரோ இப்ப ஜீரோ என்ற வாசகங்களுடன் திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். திரையில் நாயகன் தரையில் வில்லன்., தூய சக்தி அல்ல துயர சக்தி என்ற வாசகங்களுடன் திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர்.  

இதையும் படிங்க: மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share