என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!
ஆ.ராசாவை கண்டித்து வரும் ஜூலை ஒன்றாம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை "முட்டாள்" என விமர்சித்து திமுக எம்பி ஆ. ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சு அமித் ஷா மதுரையில் பேசிய கருத்துகளுக்கு பதிலடியாக கருதப்பட்டது. எதிரிகள் வெவ்வேறு வடிவத்தில் வருவார்கள் என்றும் மதுரைக்கு வந்த அமித் ஷா, டெல்லியை பிடித்துவிட்டோம், ஹரியானாவை பிடித்துவிட்டோம், மராட்டியத்தை பிடித்துவிட்டோம், அடுத்து தமிழ்நாடு எனவும் கூறியுள்ளார்., முட்டாள்... டெல்லியில் கெஜ்ரிவாலை தோற்கடித்தீர்கள், ஹரியானாவில் ஒரு தனி மனிதனை தோற்கடித்தீர்கள், ஆனால் ஸ்டாலின் ஒரு தனி மனிதனல்ல, அவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் உள்ளது என்று பேசினார்.
இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆ. ராசாவின் இந்த விமர்சனம் அவரது முந்தைய சர்ச்சைக்குரிய பேச்சுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசியபோது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த முறை, அமித் ஷாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.
இதையும் படிங்க: ஆணவ அரசியலை அழிப்பது உறுதி.. ஆ.ராசா பேச்சால் கொதித்துப்போன நயினார்..!
இந்த நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஆ.ராசாவை கண்டித்து தமிழகத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும் ஏழு இடங்களில் தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும் கூறியுள்ளார். என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்ற சர்வாதிகாரப் போக்கை திமுக கடைபிடிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன் ஆ.ராசா போன்றவர்கள் பேசுவதை கண்டிக்காமல் முதலமைச்சர் வேடிக்கை பார்க்கிறாரா என கூறினார்.
இதையும் படிங்க: 2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!